வளரி இணைகாட்சி

நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்

 
ஓர் பெயரைக் கேட்டவுடனேயே அந்தப் பெயரின் மொழி, இனம், நாடு என்ற மூன்றின் குறியீடாக அப்பெயர் விளங்குவதை உணர முடியும். அதனால் தமிழர்களாகிய நாம், தமிழிலேயே குழந்தைகளுக்கு பெயரிடுவது சிறந்தது. பிற மொழியாளர்களுடைய பெயர்களை குழந்தைக்கு வைப்பதால் தேசிய இனப் பண்பை அக்குழந்தை, பிற மொழியாளர்களிடம் இழந்துவிடும். பிற மொழியாளர்கள் தமிழகத்தை ஆண்ட காலங்களில் தமிழ்மொழியின்ஊடே பல பிறமொழிச் சொற்களும் பெயர்களும் புகுந்து கொண்டது. சோழர் காலத்திற்குப் பின்பு திட்டமிட்டு தமிழ்நாட்டு ஊர், பெயர்கள் வடமொழியாக்கம் செய்யப்பட்டது. 20-ஆம் நுற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியின் மூலம் தமிழர் தம் வரலாற்றையும், பண்டைய இலக்கியங்களையும் உணர்ந்ததால் துய தமிழில் பெயரிடும் வழக்கம் தோன்றியது. தமிழ் சமூகத்தில் உயர் சாதியினர் மத்தியில் மட்டுமே வேற்று மொழியினர் பெயரை வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்த நேரங்களில்கூட, தாழ்த்தப்பட்டோர் என்றுமே துய தமிழ் பெயர்களையே இன்றுவரை தமக்கு வைத்துக் கொள்வதைக் காணலாம்.

தமிழ் பேராசிரியரான சூரிய நாராயண சாஸ்திரியார், தம் பெயரை பரிதிமாற்கலைஞர் என்றும்; சுவாமி வேதாசலனார் – மறைமலையடிகள் என்றும்;சந்தோஷம்-மகிழ்நன் ஆனதும் பெரும் மாற்றத்தை படித்தோரிடம் கொண்டுவந்தது.

தனித்தமிழ்க் கழகம், சைவ சித்தாந்த நுற்பதிப்புக் கழகம், தமிழ் சங்கங்கள், புலவர் கல்லுரிகள், திராவிடக் கழகங்கள் மூலம் எண்ணற்nறார் தம்பெயரில் இருந்த வடமொழிப் பெயர்களைத் துறந்தனர். புதிய தமிழ் பெயரைப் பூண்டனர்.

தமிழர்கள் தன்னுணர்வு பெறுவதற்கு கட்டாயம் தமிழ்ப் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு வைப்பதன் மூலமே அதை அடைய இயலும்

மலேசியத் தமிழர் பாகம்.2

1840-ஆம் ஆண்டில் மலாயாவின் கெடா, வெல்லெஸ்லி ஆகிய மாநிலங்களில் புதைபொருள் ஆராய்ச்சியை மேற்கொண்ட ஜேம்ஸ் லோ என்றவர், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இப்பகுதிகளில் இந்தியர் குடியேறி வாழ்ந்ததற்கான சான்றுகளைக் கண்டறிந்துள்ளார். 1937-ஆம் ஆண்டில் டாக்டர். குவாட்ஸ் வேல்ஸ் என்பார் மேற்கொண்ட ஆராய்ச்சிகளும் இதனை உறுதி செய்கின்றன. இக்காலப் பகுதிகளில் ஏற்பட்ட தொடர்புகளும் குடியேற்றங்களும் வளமிக்க நாகரீகத்தின் ஓர் உயர்ந்த நிலையிலேயே ஏற்பட்டிருக்க வேண்டும் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அக்குடியேற்றங்களில் பெரும்பாலானவை ஒரு சிறந்த பண்பாட்டின் தூதுவர்களாலும், அரிய பொருள்களைப் பல நாடுகளிலும் முனைந்து விற்கும் வணிகர்களாலுமே ஏற்படுத்தப் பட்டவை என்பது அவர்கள் கருத்து. காலம் என்ற பெரு நதியில் அடித்துச் செல்லப்பட்டு, இன்று அந்தக் குடியேற்றங்களைப் பற்றிய உண்மைகள் வெறும் நினைவுகளாகவும் வரலாறாகவுமே நிற்கின்றன. இன்று அங்கு வாழும் மலேசிய இந்தியர்களுக்கும் அவர்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.

இவ்வரலாற்றுக்காலப் பகுதியை அடுத்த பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கும் தொடர்பின் விளைவாகவே மீண்டும் அங்கு இந்திய குடியேற்றங்கள் ஏற்படத் தொடங்கன. இன்று அந்த நாட்டில் வாழும் எல்லா தமிழர்களும் இக்காலப் பகுதியிலேயே அல்லது இதற்குப் பின்னரே குடியேறியவர்களின் சந்ததிகளாகவே விளங்குகின்றனர். இந்த இரண்டாம் காலக் கட்டத் தொடர்பு முன் சொன்னதுபோல் ஒரு பண்பாட்டின் தூதுவர்களாலே அல்லது வணிகர்களாலே ஏற்பட்டது அல்ல. ஒரு நாட்டிடம் அடிமைப் பட்டிருந்த இரண்டு அடிமை நாடுகளில் ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு உழைப்பதற்காக வந்த தொழிலாளர்களாலே இத்தொடர்பு ஏற்பட்டது.

1786-ஆம் ஆண்டில் பினாங்கு ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்டபோது தொடங்கிய இத்தொடர்பு, இந்த நூற்றாண்டு வரை தொடர்ந்தது எனலாம்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

மலேசியத் தமிழர் பாகம்.1

மலேசியத் தமிழர் பாகம்.1

மலாயாவுக்கும் தமிழகத்துக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்பு இருந்தது என்பதற்கான ஆதாரங்களை அகழாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து நிரூபித்திருக்கிறார்கள்.  அத்தொடர்புகள் பண்பாட்டுத் தூதுவர்களாலும், வணிகர்களாலுமே ஏற்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் என்றும், அந்த குடியேற்றங்களைப் பற்றிய உண்மைகள் வரலாறாகவே நிற்கின்றன என்பதும்   அவர்கள் கருத்து.

1786-ஆம் ஆண்டுக்குப்பின் மலாயா படிப்படியாக ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »