பருத்து நிமிர்ந்த மார்புகளும், கட்டுடலும்:ஆய்வுக்களமாகும் நவீனப் பெண்

மார்புகளைப் பற்றிப் பேசுமுன், சில முடிவுகளுக்கு வருவோம். இயற்கை பரிணாமத் தேர்வின் விளைவுதான் இன்றைய மனிதன். பெண் மார்புகள் கூட. பரிணாமத்துக்கு தாவணி, பிரா, பர்தா, காவித்தீவிரவாதிகள், பத்வா, வெங்காயம் பற்றியெல்லாம் கவலையில்லை. அதன் அக்கறை தக்கவைத்தல் மட்டுமே: ஒரு இனம் தன்னை அழியாமல் காத்துக் கொள்ள சூழல் விடுக்கும் சவால்களை சமாளிப்பதற்கான திறனும், மாற்றங்களுக்கு எற்ப தகவமைத்துக் கொள்ளும் தன்மையும் வேண்டும். ஒரு இனத்தின் இது போன்ற குணாம்சங்களைத் தொடர்ந்து தேர்ந்து வம்சாவளியாகக் கடத்தி விடும் பொறுப்பு பரிணாமத்தினுடையது. இவ்வாறு நான் இப்போது கணினியோடு உரையாடுவதற்கு, அதில் துழாவி தினசரி இரை தேடுவதெனப் பலவற்றுக்கும் பரிணாமமே பொறுப்பு. இந்த நூற்றாண்டுகளின் வளர்ச்சிப் பாதையில் நம்மை நடத்தி வந்துள்ள பரிணாமம், உணவிலிருந்து இனப்பெருக்கத் துணை வரை (கலாச்சார மொழியில் மனைவி/கணவன்) விலாவரியாய் ஆராய்ந்து செய்ய அவகாசமில்லாத முடிவுகளை எடுக்கச் சில சமிக்ஞைகளை ஏற்று பயன்படுத்தச் சொல்லித் தந்துள்ளது. நமக்கு ஏன் பொதுவாய் இனிப்பு மோகம் உள்ளது, ஏன் தமிழர்களுக்கு குறிப்பாய் தாராளமாய் மார் கொண்ட பெண்கள் மேல் அளப்பரிய பாசம் (மந்திரா, குஷ்பு, நமீதா) போன்ற பல வினோத மனோபாவங்களுக்கு இந்தச் சமிக்ஞை பழக்கம்தான் காரணம். இந்தச் சமிக்ஞைகள் பற்றித் தொடர்ந்து யோசிக்குமுன் ஒரு சின்ன வேண்டுகோள்:

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »